
குரூப் 4 தேர்வு! தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல! அன்புமணி ராமதாஸ் ஆவேசம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால் போக்குவரத்துத் துறை குரூப் 4 பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4) பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல. போட்டித் தேர்வுகள் முடிவுகள் அக்டோபரில் வெளியாகின தமிழ்நாடு அரசின் பல்வேறு து...