Posts

Showing posts from April 3, 2025
Image
  புதுச்சேரியில் 288 ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கம்; விடிய விடிய காத்திருப்பு - மழையிலும் தொடர் போராட்டம் புதுச்சேரியில் 288 ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு சட்டப்பேரவை அருகே விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்டட நிலையில் இன்று காலை மழையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசு பள்ளியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த 2019-ம் ஆண்டு 288 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 29ந் தேதி 175 ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் நமச்சிவாயம், கல்வி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 288 ஆசிரியர் பணியிடங்களை, நிரந்தமாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று கூறினார். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கடந்த 31-ந் தேதி அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் ...
Image
  25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்.. வாங்கிய சம்பளத்தையும் முழுசா திரும்ப தரணும்! சுப்ரீம் கோர்ட் உத்தரவு மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கிடையே அவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனங்களையும் ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை இப்போது சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அதாவது ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களில் பலர் எதுவுமே எழுதாத வெற்று ஓஎம்ஆர் தாள்களையே சமர்ப்பித்துள்ளனர். அதன் பிறகு அவர்களுக்குப் போலியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சட்டவிரோதமாக அவர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்பதே வழக்காகும். கொல்கத்தா ஐகோர்ட் இந்த வழக்கை முதலில் கொல்கத்தா ஐகோர்ட் விசாரித்தது. 25 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனங்களையும் ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட், இதுவரை அவர்கள் ப...
Image
  புதுச்சேரியில்  சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கோரிக்கை புதுச்சேரியில்  சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாணன் தலைமையில் ஏராளமானோா் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே உள்ள கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு, அவா்கள் புதுவை கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினியை சந்தித்து மனு அளித்தனா். அப்போது, அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அண்மையில் நடைபெற்ற மாதிரித் தோ்வில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தோல்வியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பொதுத் தோ்வில் மாணவா்கள் விதிகளை மீறி பாடப் புத்தகங்களை பாா்த்து எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களால் புதுவையின் கல்வித் தரம் பாதிக்கப்படும். இதனால், சிபிஎஸ்இ பாட முறையை திரும்பப் பெறவும், பொதுத் தோ்வில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்க...