Posts

Showing posts from March 27, 2025
Image
  புதுச்சேரி காவல்துறையில் 516, விரிவுரையாளர் பணியிடங்கள் 475 நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி காவல்துறையில் 516, அரசு கல்லுாரிகளுக்கு 475 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த நிலையில், பதிலளித்து உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுச்சேரி மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் பல நல திட்டங்களை அளித்துள்ளோம். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைந்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் மாணவர்கள், இளைஞர்கள் முன்னேற்றம் அடைய அனைத்து செயல் திட்டங்களையும் வகுத்து செயலாற்றி வருகின்றோம். லாஸ்பேட்டை காவல்நிலைய கட்டுமான பணி விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். காவல் தலைமை அலுவலகம் கட்டிடம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்படும். கரிக்கலாம்பாக்கம் புறக்காவல்நிலைய பணிகள் தொடங்கப்படும். பல்வேறு காவல்நிலைய கட்டடங்கள் பழுது, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். காவல்துறையில் காலியாக உள்ள சப்இன்ஸ்பெக்டர்-70, காவல...
Image
 "மேலும் 1000 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள்"- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தமிழகத்தில் கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்து விதமான அரசுப்பள்ளிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு சட்டக்கல்லூரி என தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்களில் ஆசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள், வட்டார கல்வி அதிகாரிகள் ஆகியோரை பொதுத்தேர்வு முறையில் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கான நாட்காட்டியை அவ்வப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவேற்றம் செய்யும். ஏற்கனவே, தமிழகத்தில் 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.