சத்துணவு பணியாளர்கள் பணி நியமனம் எப்போது.? அமைச்சர் கீதா ஜீவன் சட்டசபையில் அறிவிப்பு தமிழகத்தில் 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒரு மாதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டசபையில் தெரிவித்துள்ளார். Anganwadi workers : பள்ளியில் மாணவர்களுக்கு சத்தான உணவுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பள்ளிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. எனவே அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கையானது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள்மொத்தம் 7,783 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதன் படி அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் என மூன்று பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இவர்களுக்கு மாத சம்பளமாக 24,400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எப்போது பண...