
' காலிப் பணியிடங்களை உயர்த்துங்கள்'- நியமன தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை உயர்த்துமாறு சேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பட்டதாரி ஆசிரியர்கள் என்றால் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள். 2012 ஆம் ஆண்டு வரை பிஎட் முடித்தால் டீச்சர் ஆகலாம் என இருந்தது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு டெட் எக்ஸாம் தேர்ச்சி பெற்றால் தான் டீச்சர் வேலை என சொன்னார்கள். 2018க்கு பிறகு நியமனம் எழுதினால் தான் ஆசிரியராக முடியும் என்று சொன்னார்கள். 2018க்கு பிறகு நியமனமும் எழுதி பாஸ் செய்த 2024 ஆம் பேட்ஜ் பட்டதாரி ஆசிரியர்கள் நாங்கள். நியமனம் வைத்தது எங்களுக்கு சந்தோஷம். அதற்கு அரசிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஏனென்றால் 4 லட்சம் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. அதில் அவர்கள் ஃபில்டர் பண்ணி எடுத்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த சொல்லி நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். 3,1...