Posts

Showing posts from January 18, 2025
Image
  நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கு அபார் ஐ.டி முக்கியம் நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் அபார் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்களோடு இந்த அபார் ஐ.டி எண்களும் ஒப்பீடு செய்து சரிபார்க்கப்படும். நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது முதல், கலந்தாய்வுக்கு செல்வது வரை அனைத்து நடவடிக்கைகளில் அபார் ஐ.டி முக்கியம் என்று அறிவித்துள்ளது. APAAR என்பது தானியங்கு நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேட்டைக் குறிக்கிறது, இது இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு அடையாள அமைப்பாகும். இந்த முயற்சியானது 2020 ஆம் ஆண்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்து, அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். APAAR ஆனது மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் மூலமும் கல்விப் பதிவுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் கல்வியில் பொறுப்புணர்வையும் வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்கிறது. இது செயல்திறனை மேம்படுத்துகிறது, போலித்தனத்தை நீக்கு...
Image
  தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.31 வரை அவகாசம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப கல்வித்துறையால் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய வணிகவியல் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் விண்ணப்பத்தில் பிப்ரவரி 2 முதல் 4-ம் தேதி வரை திருத்தம் செய்துகொள்ளலாம். இதற்கு எவ்வித அபராத கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது