
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு.. 9,532 ஆக உயர்த்தி அறிவிப்பு குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை மீண்டும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 41 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குரூப் 4 பணியின் மொத்த காலியிடங்கள் 9,532 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2 என பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்பது கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 23 வகையான பணிகளில் மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 9 ம்தேதி குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 15.88 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே தான் குரூப் 4 காலிப...