7,535 ஆசிரியர் பணியிடங்கள்.. தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி.. முழு விவரம்
தமிழகத்தில் நடப்பாண்டில் 7535 ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு மையம் (Teachers Recruitment Board) அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை ( TRB Annual Planner 2025) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 9 தேர்வுகள் மூலம் 7,535 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர், சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர், கலை மற்றும் அறியில் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அட்டவணையில் டெட் தேர்வு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, செட் தேர்வு 2025 மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், assistant director, assistant librarian ஆகிய பணிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் இதில் 232 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2025 மே மாதத்தில் நடைபெறும் எனறும் இதில் 132 இடங்கள் நிரப்பப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவிக்கான 4,000 காலியிடங்களுக்கு 2025 ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்படடுள்ளது.
முதலமைச்சர் ஆராய்ச்சி பெல்லோஷிப் (CMRF) திட்டத்தில் 180 மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் 2025 நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்ற்கு 1,915 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
7,535 ஆசிரியர் பணியிடங்கள்
இளங்கலை பயிற்சி (BT) உதவியாளர்கள் பணி மற்றும் BRTE தேர்வு 2024 செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் இதில் 1,205 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 51 BEO பணிக்ளுகக் நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மார்ச் 2026ஆம்ஆண்டு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கூடுதலாக, பல்கலைக்கழகங்களின் தேவை அடிப்படையில் கோரிக்கையின் பேரில், தமிழ்நாட்டின் பல்கலைக்கழக கல்லூரிகளின் இணைப் பேராசிரியர்கள்/இணைப் பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த டெட் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியடவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டிற்கான டெட் தேர்வு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெற்று இருந்திருக்கும் சூழலில், ஆனால், அதற்கான அறிவிப்பை வெளியாகவில்லை. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான அட்டவணையிலும் டெட் தேர்வு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment