வனத்துறை காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு.!



தமிழ்நாடு வனத்துறையில் வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.


தமிழ்நாடு அரசு வனத்துறையில் உள்ள 34 வரைவாளர் மற்றும் 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும் என்ற வனத்துறை தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். 


இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது 72 பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அனுமதி அளித்துள்ளது. இதனை அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog