வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்... ஜாக்டோ ஜியோ கொந்தளிப்பு!





தமிழகத்தில் நேற்று பிப்ரவரி 25ம் தேதி செவ்வாய்க்கிழமை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.


காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஊதிய முரண்களை களைய வேண்டும், மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் சென்னை எழிலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 


இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன், "இன்று தமிழக அரசை வன்மையாக கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டா ஜியோ ஆர்பாட்டம் நடத்தி வருகிறோம். எங்களது உழைப்பு , தியாகத்தால் தமிழக மக்களை மேம்பட வைக்கிறோம். 


திங்கள் அன்று அரசு தரப்பில் அமைச்சர்கள் எங்களுடன் 2:30 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் எங்கள் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தோம் அதன்பின் அமைச்சர்கள் எங்கள் கோரிக்கைகள் குறித்து திங்கள் மாலை முதல்வருடன் பேசி முடிவை அறிவிப்பதாக கூறினர். 8 மணிக்கு எங்களை தலைமைச் செயலகம் வருமாறு கூறி சென்ற அமைச்சர்கள் முதலமைச்சர் சந்தித்த பிறகு எங்களை அழைக்கவே இல்லை, இது ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் முதுகில் குத்தும் மோசமான , வஞ்சிக்கும் செயல் முதுகில் குத்தும் நம்பிக்கை துரோகம்.


 

இதுவரை நாங்கள் பார்த்த முதலமைச்சர்களிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். எங்களை ஏமாற்றினால் 2026 ல் திமுக ஏமாந்து விடும். 


திங்கள் அன்று  நாங்கள் இருக்கும் பொழுது தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் எங்களை சந்தித்து பேசவில்லை. இன்று தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது. நாங்கள் நான்காண்டு காலம் அவகாசம் கொடுத்திருக்கிறோம். தற்போது அரசு 4 வார அவகாசம் கேட்பது எங்கள் போராட்ட உணர்வை மழுங்கடித்து , எங்களை பிளவுபடுத்தி மீன் பிடிப்பதற்கான செயல். ஆதாயம் பெறுவதற்காக இந்த தவறான போக்கை அரசு கடைபிடித்து வருகிறது. எங்களை ஏமாற்ற தொடங்கி விட்டீர்கள் என்பதை அரசு ஊழியர்கள் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டார்கள்.


 கோரிக்கையை வெல்ல என்ன வழிமுறைகள் இருக்கிறதோ அனைத்தையும் பயன்படுத்துவோம். 2026 ல் எங்கள் பணியை எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்துவோம். 


அந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என நாங்கள் கவலைப் படுகிறோம். கால அவகாசம் கேட்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அடுத்தக்கட்ட போராட்டமாக முழு நேர போராட்டம் நடைபெறும்" எனக் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog