Posts

Showing posts from August 21, 2024
Image
  பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது பள்ளிக்  கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மனவியல் சார்ந்த பிரச்சனைகளைப் போக்க வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆய்வில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது ஆசிரியர்களின் பயிற்சி முறை எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ள ஆய்வு பணி நடைபெற்றது.  இந்த ஆய்வில் பள்ளி உள்கட்டமைப்பு தொடர்பாக சில கோரிக்கை வந்துள்ளது அவை நபார்டு வங்கிகள் மூலம் நிதிகள் பெறப்பட்டு பள்ளிகளுக்கு செயல்படுத்தப்படும். கொரோனா காலத்திற்குப் பின்னர் மாண
Image
  இந்தியா போஸ்ட் கிராமீன் டாக் சேவக் ஆட்சேர்ப்பு - தகுதிப் பட்டியல் வெளியீடு இந்தியா போஸ்ட் கிராமீன் டாக் சேவக் ஆட்சேர்ப்பு 2024க்கான தகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய தபால் துறையில் காலியாக உள்ள 44,228 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பிரிவு வாரியான பட்டியலை வெளியிட்டுள்ளது. கிராமீன் டக் சேவக் (GDS) ஆட்சேர்ப்பு 2024க்கான முடிவுகளை இந்திய அஞ்சல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. பிரிவு பெயர், அலுவலகம், பதவியின் பெயர், பதிவு எண், மதிப்பெண்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டிய முகவரி போன்ற விவரங்களுடன் PDF கோப்புகள் கிடைக்கின்றன. இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகுதிப் பட்டியலைப் பார்க்க இந்த https://indiapostgdsonline.gov.in/ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
Image
  TNTET: 2 ஆண்டாக நடக்காத ஆசிரியர் தகுதித் தேர்வு; அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் இரு ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: ''தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், தேர்வுக்கான அறிவிப்பு கூட இன்னும் வெளியிடப்படாதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இந்த விதியை மதிப்பதே இல்லை மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே