Posts

Showing posts from June 7, 2024
Image
 ' நீட்' ஏகப்பட்ட குளறுபடி.. மறு தேர்வு நடத்த வேண்டும்.. தேசிய தேர்வு முகமைக்கு 2,000 மாணவர்கள் கடிதம் : நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், கருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு, இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமை ஆகியவையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தேர்வு முடிவுக்கு முன்பே ஒஎம்.ஆர் ஷீட் மற்றும் வினாக்களுக்கான விடைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவு வெளியி
Image
  இன்று நடைபெற இருந்த 'செட்' தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் திடீர் ஒத்திவைப்பு! இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வுகள் திடீரென எந்த காரணங்களும் கூறப்படாமல், தேதியையும் குறிப்பிடப்படாமல் செட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்வெழுத தயாராகி வந்திருந்த தேர்வர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்ற விரும்பும் உதவி பேராசிரியர்களுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் செட் எனப்படும் மாநில தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செட் தேர்வுகள் ஜூன் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுகளில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஒன்றரை லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு இன்று துவங்கயிருந்த நிலையில், திடீரென தற்போது இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '
Image
  ஜூன் 23-இல் இடைநிலை ஆசிரியா் நியமனத் தேர்வு: துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு வரும் 23-இல் இடைநிலை ஆசிரியா் நியமனத் தோ்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி ஆய்வு நடத்தினாா். இடைநிலை ஆசிரியா் நியமனத் தோ்வு நடத்துவது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராணிப்பேட்டை விஆா்வி பெண்கள் நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் தோ்வு மையங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில், வாலாஜாபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 220 பேரும், ராணிப்பேட்டை வி.ஆா்.வி. மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 226 பேரும் என மொத்தம் 446 போ் இடைநிலை ஆசிரியா் நியமன தோ்வுகளை வரும் 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எழுத உள்ளனா். இந்த தோ்வு நடைபெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் வருவாய் கோட்டாட்சியா் ஆய்வு செய்து ஏற்பாடுகள