இன்று நடைபெற இருந்த 'செட்' தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் திடீர் ஒத்திவைப்பு!



இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வுகள் திடீரென எந்த காரணங்களும் கூறப்படாமல், தேதியையும் குறிப்பிடப்படாமல் செட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்வெழுத தயாராகி வந்திருந்த தேர்வர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது..


தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்ற விரும்பும் உதவி பேராசிரியர்களுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் செட் எனப்படும் மாநில தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செட் தேர்வுகள் ஜூன் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த தேர்வுகளில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஒன்றரை லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு இன்று துவங்கயிருந்த நிலையில், திடீரென தற்போது இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'நாளை துவங்கியிருந்த செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தொழில்நுட்ப காரணங்களால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog