
ஜேஇஇ முதன்மைத் தேர்வு: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்! ஐஐடி என்ஐடி போன்ற மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் ஜேஇஇ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், பிறகு மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்தேர்வு எழுத முடியும். ஜேஇஇ மெயின் தேர்வு வரும் ஜனவரி-பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு (JEE Main, Session 1, exam) ஜனவரி 24 முதல் பிப்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த முதல் அமர்வுக்கு https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் முடிவுகள் பிப்.12-ம் தேதி வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறியலாம். 011-40759000 / 69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள...