பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இணையதள முகவரி வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடவாரியாக ஒரு மதிப்பெண் வினாக்கள் அடங்கிய வினாத்தொகுப்பு, ஆன்லைனில் உருவாக்கி, இணையதள முகவரியை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடத்திட்ட குழு, பாட கருத்தாளர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் கொண்ட குழு சார்பில், பாடவாரியாக வினாத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தையும் முழுமையாக படித்தால் மட்டுமே, கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். தவறாக பதிலளித்தால், விடை திரையில் தோன்றும் வகையில், இ-வினாத்தாள் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் ஹைடெக் ஆய்வகத்தில் பதிவிறக்கி, பயிற்சி பெற அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 198 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்குள்ள கம்ப்யூட்டர் ஆய்வகத்தில், வினாத்தொகுப்பு பதிவிறக்குவதற்கான, இணையதள முகவரி, க்யூ.ஆர்., கோடு ஆகியவை, பள்ளிகளு...