
TN 10th Exam: அதிர்ச்சி... விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 960 மாணவர்கள் ஆப்சென்ட் மாநிலம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் நாளான இன்று நடைபெற்ற தமிழ் பாட தேர்வினை விழுப்புரம் மாவட்டத்தில் 960 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. மொத்தமுள்ள 25 ஆயிரத்து 623 மாணவர்களில் 24 ஆயிரத்து 663 மாணவர்கள் இன்று தேர்வு எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்தத் தேர்வு வருகின்ற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 125 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை, 364 பள்ளிகளை சேர்ந்த 13,006 மாணவர்களும், 12,621 மாணவிகளும் என மொத்தம் 25,627 மாணவ- மாணவிகள் எழுதி வருகின்றனர். தேர்வுப் பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தேர்வின் போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய...