
கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பாதிக்கபட்ட பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை NCTE விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு விடியல் தருவாரா?NCTE norms, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா? கலைஞர் போட்ட கையெழுத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உயிர் கொடுப்பாரா? 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் நிரப்பும் நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2011 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது..அதிமுக கொள்கை முடிவு தேர்வு தான் வைப்பார்கள் நிலுவையில் உள்ள காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் என்று கேட்ட போது கலைஞர் ஆட்சியில் சான...