
` கருணாநிதி உடனே அறிவிப்பார்; ஆனால் நீங்கள்..!- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் ஆசிரியர்கள் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை சுதந்திர தினத்தன்று கோட்டையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன் கூறுகையில், "இந்திய நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 01.07.2022 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வழக்கமான நடைமுறையை சற்று தாமதமாக அறிவித்திருந்தாலும் மகிழ்வையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் மத்திய அரசு 2022 ஜனவரி முதல் வழங்கியுள்ள அகவிலைப்படியை, 2022 ஜூலை முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்கப்படும் அகவிலைப்படி என...