
அரசு கல்லூரி தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை அரசு கல்லூரி தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022-23ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இப்பள்ளிகளில் 3,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரசுப்பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், கணிதம் என பல்வேறு பாடங்களில் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் என்றால் முழுமையாக காலி பணியிடங்களை நிரப்ப முடியாத நிலையை தவிர்க்க முடியாது என்று ஆசிரியர் சங்கங்கள் வேதனை தெரிவித்து வந்தன. இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றத...