
பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு வழக்கு: அரசு தரப்பில் தகவல் வேண்டும் - நீதிமன்றம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில், வழக்கு குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலைச் சேர்ந்த தண்டபாணி, மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்கள் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பின் பிஎஸ்சி கணிதம், எம்எஸ்சி கணிதம் ஆகிய படிப்புகளை தமிழ் வழியில் கல்வி கற்றோம். கடந்த 2019 நவம்பர் 29ஆம் தேதி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் வேலைக்கான 1060 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பணிக்காக தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்தேன். பின் தேர்வு நடைபெற்றது. பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பு 2022, ஜூலை 8ஆம் தேதி வெளியானது. அதில் எனது பெயர் இடம் பெறவில்லை. நான் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு முறையாக தமிழ் வழி ...