
இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு..!!! தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருதியும் தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,188முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை 8 மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக நியமிக்க பள்ளிக்கல்வி துறை தற்போது முடிவெடுத்துள்ளது. இதில் பள்ளி மேலாண்மை மூலமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் 7,500 ரூபாய் மதிப்பு ஊதியம் வழங்கப்படும். அதனைப் போல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய், முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும் பள்ளி மேலாண்மை கு...