
நீட் 2022 தேர்வு விண்ணப்பத்தில் கரெக்ஷன் செய்யணுமா? தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு! 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர், விண்ணப்பத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்றுதான் இந்த வசதி தொடங்கியிருக்கிறது என்றபோதிலும், இது நாளையுடன் முடிவடைகிறது. இரண்டு நாள்களுக்கு மட்டுமே இருக்கும் இந்த வசதி மூலம், விண்ணப்பத்தில் பிரிவுகள் ஏதேனும் தப்பாக கொடுத்தவர்கள் தாங்கள் கொடுத்த தரவுகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். விண்ணப்பத்தாரர்கள் எந்தப்பிரிவில் தவறான தரவை கொடுத்தாளர்களோ, அப்பிரிவில் தங்களின் சரியான தகவலை கொடுத்துவிட்டு, அதற்காக ஒரு ஆதார சான்றிதழை ஸ்கேன் செய்து அவர்கள் பதிவேற்ற வேண்டியிருக்கும். இச்சேவையை, neet.nta.nic.in என்ற தளத்தில் உள்ள பின்வரும் Category Correction Window வின் கீழ் இதை அவர்கள் சரிசெய்துகொள்ளலாம். நாளை இரவு 9 மணியுடன் இச்சேவை முடிவடைகிறது. இந்தச் சேவையை பயன்படு...