பிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், 2017ம் கல்வி ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின், இந்த விதி மாற்றப்பட்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிளஸ் 2 பொதுத் தேர்வை, பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விதிகளை, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இதன்படி, பிளஸ் 1 தனித் தேர்வர்கள், செய்முறை அல்லாத பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதலாம். குறைந்த பட்ச வயது, 15 ஆண்டு, ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது. எழுத்துத் தேர்...