10 ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும் ? பத்தாம் வகுப்பு கணித தேர்வில் , கட்டாய வினா பகுதியில் இடம் பெற்ற வினாக்கள் , கடினமாக இருந்ததால் , சென்டம் குறையலாம் என , கூறப்படுகிறது . பத்தாம் வகுப்பு பொது தேர்வில் , நேற்று கணித தேர்வு நடந்தது . பொதுவாக கணித தேர்வில் , நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும் என , மாணவர்கள் விரும்புவர் . ஆனால் , நேற்றைய வினாத்தாள் கடினமாக இருந்ததால் , மாணவர்களின் சென்டம் லட்சியம் நிறைவேறுமா என , சந்தேகம் எழுந்துள்ளது . ● இரு மதிப்பெண் வினா , 36 வதுவினா, கட்டாய வினா , கிரியேட்டிவ் வகை வினா கடுமையாக குழப்பியது . இந்த வினாவை , புத்தகத்தில் பார்த்ததே இல்லை என , மாணவர்கள் கூறினர் ● ஐந்து மதிப்பெண்ணுக்கான , 45 வது வினாவில் , ' பி ' பிரிவு வினா கடினமாக இருந்தது . ஆனாலும் , சாய்ஸ் என்ற விருப்ப வினாவில் , கடின வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்காமல் விட்டு விட்டனர் . இதனால் , சென்டம் குறையலாம் என , ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர் .