கணினி ஆசிரியர் பதிவு முப்பு பட்டியலில் குளறுபடி சரி செய்யுமா? வேலை வாய்ப்பு அலுவலகங்கள்
பல மாவட்டங்களில் கணினி பயிற்றுநர் பணிக்கான பதிவினை சரிபார்க்க பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கணினி பாடம் பயிலாதவர்களையும் (வரலாறு வணிகவியல் கணிதம் மற்றும் பல பாடங்கள்) கணினி பயிற்றுநர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதனால் முறையாக பி.எஸ்.சி. கணினி அறிவியல் மற்றும் பி.எட் படித்தவர்கள் பாதிக்கப்படுவதோடு முறையான இடத்தில் தான் நாம் இருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். மேலும் பி.எட் படித்த ஆண்டிற்கு பதிலாக பி.எஸ்,சி படித்த ஆண்டினை பதிவு காலமாக குறிப்பிட்டுள்ளனர் இந்த குறைபாடுகளை மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் சரி செய்வதாக வாய்டிமாழியாக என்று உறுதி கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக வேலைக்காக காத்து இருக்கும் வேலை இல்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் பயன் அடையும் வகையில் வேலை வாய்ப்பு அலுவலர்கள் சரி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment