ஆசிரியர் தகுதித் தேர்வு-வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் செப்., 29ல் உண்ணாவிரதம்?
தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், மாநில அவசர
ஆலோசனைக் கூட்டம், தஞ்சையில் நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் செல்வமணி, வேலையில்லா பட்டதாரி தமிழாசிரிய சங்க மாநில தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. தற்போது, ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. இதனை, முதல்வர் பரிசீலனை செய்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பழைய நடைமுறையில் பதிவு மூப்பு முறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கடந்த, 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம் பெற்றவர்கள் போக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இதில், கடந்த, 2012ம் ஆண்டு ஜூன், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு நியமனம் பெற்றவர்கள் போக, நிலுவையில் உள்ள, 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும், 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும், என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தமிழாசிரிய சங்க மாநில செயலாளர்கள் சந்திரசேகரன், அரசுமணி, ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர், சாமுவேல், சங்கர், மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கர், இளவரசன், பழனியாயி, ஹைதர்அலி, ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர் சுப்புலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment