மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை மதுரையில் துவங்கியது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மதுரை மண்டலத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர் 242 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரை ஓசிபிஎம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
பள்ளித் தேர்வுகள்துறை இணை இயக்குநர் உமா, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. முதல்நாளில் 125 பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்புப்பணி நடைபெற்றது. மீதமுள்ள 117 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment