2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலி:அரசு ஊழியர் சங்க செயலர் தகவல்
ராமநாதபுரம்;'தமிழகத்தில், 2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன' என, தமிழக அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.ராமநாதபுரத்தில், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:தமிழக வருவாய் துறையில், 2,000 வி.ஏ.ஓ.,க்கள்; 70 துணை கலெக்டர்கள்; வணிக வரித் துறையில், 4,600; தேர்வாணையத்தில், 150; வேலைவாய்ப்பு துறையில், 470; சமூக நலத்துறையில், 970; சத்துணவு திட்டத்தில், 25 ஆயிரம்; ஐ.சி.டி.எஸ்.,சில், 10 ஆயிரம்; கல்வித் துறையில், 5,000; உணவு பொருள் வழங்கல் துறையில், 750; நகராட்சிகளில் 17 ஆயிரம் என, 2.87 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன.
இதில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், 2 லட்சம் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களே, அதிகளவில் காலியாக உள்ளன.
2014ல், 1.50 லட்சம் பேர் ஓய்வு
பெறுகின்றனர்.நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த மக்கள் தொகை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 67 ஆண்டுகளாக தொடர்கிறது. மூன்று மடங்கு அளவுக்கு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
மாறாக, தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. குறைவான ஊதியத்தால், படித்த இளைஞர்களின் வாழ்க்கை தரம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொகுப்பூதிய ஊழியர்களின் தவறுகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் உள்ளது. காலி பணியிடங்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வதால், அரசின் புதிய திட்டங்களை அமல்படுத்தும்போது, பணிச்சுமையால் ஊழியர்கள் மனஉளைச்சல் அடைகின்றனர்.பங்களிப்புடன் கூடிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தில், 1.76 லட்சம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, ஓய்வுபெறும் நாளில் கொடுக்காமல் நிலுவையில் உள்ளது.அரசு நிர்வாகங்களில் தேக்க நிலையை போக்க, காலி பணியிடங்களை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment