உதவி பேராசிரியர் பணிக்கு கூடுதல் தகுதி படிவம்: சமர்ப்பிக்க, டி.ஆர்.பி., அறிவுறுத்தல்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள், கூடுதல் தகுதிகள் குறித்த படிவங்களை, ஜூலை 1 முதல், 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, ஆசிரியர்தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்தாண்டு நவ., 25 மற்றும் டிச., 6ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதுகுறித்த மதிப்பெண்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, இந்தாண்டு ஜன., 30 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், மீண்டும் ஒரு முறை, விடுபட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், அரசின் அறிவுறுத்தல்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களிடம் இருந்து, சில தகவல்களைப் பெற, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.
இதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள், கல்வியியல்கல்லூரியில் பணியாற்றி, அனுபவம் பெற்றிருந்தால் படிவம் 1 ஐயும், 2009,ஏப்ரல், 3ம் தேதிக்கு முன், எம்.பில்., முடித்து, சரியான பணிச்சான்று பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அதற்கான 'தகுதி மதிப்பெண்' பெறாதவர்கள், படிவம் 2 ஐயும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்தவர்கள், ஜூலை, 1ம் தேதி; வணிகவியல் துறையினர், 2ம் தேதி; கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,வரலாறு மற்றும் பொருளியல் துறையினர், 3ம் தேதி; கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பிற துறையினர், 4ம் தேதி, சென்னை, காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment