மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் காணலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது கட்டாயம். ஆசிரியர் தேர்வு வாரியம் பல முறை ஆசிரியர் தேர்வை நடத்தி உள்ளது. இந்த தேர்வு முன்பு அனைவருக்கும் பொதுவாக நடத்தப்பட்டது.
சமீபத்தில் தனியாக சிறப்பு தேர்வு நடத்த வேண்டும் என்று பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட பி.எட். படித்த பட்டதாரிகள் பேராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
முடிவு வெளியீடு
அதன்படி கடந்த மே மாதம் 21ந்தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 4 ஆயிரத்து 477 பேர் எழுதினார்கள்.
இவர்களின் தேர்வு முடிவு நேற்று இரவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல தேர்வுக்கான கேள்வி பதிலும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
சான்றிதழ் சரிபார்த்தல்
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறந்த பாட நிபுணர்களால் விடை சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment