வி.ஏ.ஓ., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு :384 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
சென்னை : வரும் 14ம் தேதி, நடக்க உள்ள, வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., வருவாய்த் துறையில், காலியாக உள்ள, 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, வரும் 14ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது.இதற்கு, 10 லட்சம் லட்சத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பித்ததில், தகுதியில்லாத, 384 பேரின் விண்ணப்பங்களை, தேர்வாணையம் நிராகரித்தது. தேர்வு தேதி நெருங்கியதை அடுத்து, தகுதியான தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்கள், www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில், விண்ணப்ப பதிவு எண்ணை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். 'ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தங்களின் பெயர், நிராகரிக்கப்பட்டவர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை, சரிபார்க்க வேண்டும். இந்த பட்டியலிலும், பெயர் இல்லை எனில், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட விவரங்களுடன், வரும் 9ம் தேதிக்குள், contacttnpsc@ gmail.com என்ற, 'இ-மெயில்' முகவரிக்கு, விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment