முப்பருவ கல்வி முறை; திண்டாடும் மாணவர்கள்; ஆசிரியர்கள் கவலை.
முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒரே புத்தகத்தை படித்து, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுஎன தேர்வு எழுதும் வழக்கத்தில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் மாறுதல் செய்யப்பட்டது.
புதிய முறைப்படி, நான்கு மாதங்களுக்கு ஒரு பருவம் என்ற அடிப்படையில் முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என புத்தகங்களை மூன்றாக பிரித்து, பாடம் நடத்தி தேர்வுநடத்தப்படுகிறது.ஒவ்வொரு பருவத்தேர்வும் முடிந்த பிறகு, அவர்கள் படித்த பாடப்புத்தகம், அதன்பின், தேவைப்படுவது இல்லை. அந்த பாடங்களை மாணவ, மாணவியர் மறந்து விடுகின்றனர். அடுத்த பருவத்துக்கான பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.முப்பருவ கல்வி முறையில் படித்து வரும் மாணவ, மாணவியர் அடுத்தகல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்விமுறை இல்லை. காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஆண்டு முழுவதும் படித்த மொத்த பாடங்களையும், பொதுத்தேர்வில் எழுத வேண்டும். முப்பருவ கல்வி முறையில் குறைந்த பாடங்களை மட்டுமே படித்து, தேர்வு எழுதி பழகிய மாணவர்கள், ஆண்டு முழுவதும் படித்த பாடங்களை, பொதுத்தேர்வின் போது ஒட்டுமொத்தமாக படிப்பதும், அதற்கான வினாக்களுக்கு பொதுத்தேர்வில் பதில் அளிப்பதும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால், பல மாணவர்களின் மதிப்பெண் கணிசமாக குறையக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "தனியார் பள்ளிகளில், முப்பருவ தேர்வு முறை இருந்தாலும், மூன்றாம் பருவ தேர்வின்போது மூன்று பருவ பாடங்களையும் மொத்தமாக வைத்தே, தேர்வு எழுதப்படுகிறது. அரசு பள்ளிகளில் அம்முறை பின்பற்றுவதில்லை. ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், அக்கறை காட்டாமல் உள்ளனர்,' என்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment