ஆசிரியர் பணிநிரவல்:டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். 2011 செப்.,1 ல் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை படி, ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். அவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்யவேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2,900 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், பணிநிரவல் மூலம் உபரி ஆசிரியர்களால் நியமிக்கப்பட உள்ளது. இதனால், 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையினர் கூறுகையில், "" ஆசிரியர் பணியிடங்கள் குறையாமல் இருக்க ஆங்கில வழி கல்வியை துவங்கி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வருகிறோம்,'' என்றார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment