இன்று குரூப் 2 ஏ தேர்வு
உதவி ஆணையாளர் உள்பட 2269 பணியிடங்களுக்கான குரூப் 2 ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
அரசின் பல்வேறுத் துறைகளில் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட 2269 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இத்தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வினியோகிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக 32 மாவட்டங்களில் 240-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இத்தேர்வை கண்காணிக்கவும் மைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment