மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: 8 லட்சம் பேர் எழுதினர்
சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளையும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். தேர்வில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் விதத்தில் தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் இவற்றில் தேர்வு எழுதிய பாடங்களின் விவரங்களில் பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ள திங்கள்கிழமை மாலைக்குள் (மார்ச் 17) சி.பி.எஸ்.இ. அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.
இத்தேர்வுக்கான சரியான விடைகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் மார்ச் 19-ஆம் தேதிக்குள் சி.பி.எஸ்.இ. அமைப்பிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இ.மெயில் முகவரி: ctet@ cbse.gov.in
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment