ஆசிரியர் தகுதித் தேர்வு: 29 ஆயிரம் பேருக்கு நாளைமுதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன்மூலம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்காக மாநிலம் முழுவதும் 30 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை:
"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்குபிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்குபிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும்வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
கூடுதலாக தேர்ச்சி:
நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகள் திருத்தப்பட்டன.அதில் 2 கேள்விகள் நீக்கப்பட்டதோடு, அந்த கேள்விகளுக்கு தலா 1 மதிப்பெண் வழங்கப்பட்டது. மேலும் 2 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் சரியான விடைகளாக அறிவிக்கப்பட்டன.
இதனடிப்படையில்,விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளில் கூடுதலாக 2,436 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன.முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இதில் வெளியிடப்பட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளின் முடிவில் இரண்டாம் தாளில் மட்டும் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை திருத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில்,திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு,சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment