நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மத்திய மந்திரி பல்லம் ராஜூ தகவல்
நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய மந்திரி பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பல்லம் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
6 லட்சம் ஆசிரியர்கள்
பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றில் நாம் விரைவாக முன்னேறி வருகிறோம். ஆனால் தரமான கல்விச்சேவையில் இன்னும் அதிக முன்னேற்றம் தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை விளங்கி வருகிறது.நாடு முழுவதும் 6 லட்சம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. எனினும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில், ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment