பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள்காலி
பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் ( டி . இ . ஓ .), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ( சி . இ . ஓ .), 3 இணை இயக்குநர் , 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன .
இந்த கல்வியாண்டு ஜூன் 10- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தக் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர் .
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிடவும் , இலவச லேப்டாப் , கணித உபகரணப் பெட்டி , கலர் பென்சில்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவும் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர் .
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் , மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய இயக்குநர் பணியிடங்களும் , தேர்வுத்துறை இணை இயக்குநர் ( மேல்நிலை ) உள்பட 3 இணை இயக்குநர் பணியிடங்களும் 4 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன .
இந்த இடங்களில் இப்போது அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன .
விருதுநகர் , சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் , அனைவருக்கும் கல்வித் திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என 2 சி . இ . ஓ . பணியிடங்களும் காலியாக உள்ளன . அதோடு திருநெல்வேலி , பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன .
திருவாரூர் , கரூர் , செய்யாறு , மத்திய சென்னை உள்ளிட்ட 44 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன .
கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக இந்த காலியிடங்களை நிரப்பினால் தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் தொய்வின்றி செயல்படுத்தப்படுவதோடு , கல்விப் பணிகளும் சிறப்பாக மேற்பார்வை செய்யப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர் .
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment