முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, கடைசி நாளான நேற்றுடன், 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம், 31ம் தேதியில் இருந்து, நேற்று வரை வழங்கப்பட்டன. இதில், 1.5 லட்சம் விண்ணப்பங்கள் வரை விற்பனை ஆகியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும், நேற்று, கடைசி நாள். நேற்றுடன், 1.42 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில் பெறப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ஒரு சில மாவட்டங்களில், சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை என்றும், அவை கிடைத்தால், மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, மேலும் சில ஆயிரங்கள் வரை அதிகரிக்கலாம் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment