ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய1.12 லட்சம் தமிழ் மாணவர்கள் கல்வித்துறை அதிர்ச்சி
உத்தமபாளையம்:ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால், ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில், தமிழ் வழியில் சேர வேண்டிய ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் ஆங்கிலக் கல்விக்கு சென்றுள்ளது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில், பள்ளியில் சேராக் குழந்தைகள். இடைநின்ற மாணவர்கள், இடம் பெயர்ந்த மாணவர்கள், வயது வந்தும் பள்ளியில் சேரா குழந்தைகள் மற்றும் பள்ளி வயது வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள், குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும். அங்கன்வாடி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சார்ந்த, மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதியில், 14 வயது வரையிலான மாணவர்களின் ஒட்டுமொத்த விபரங்களும் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பு மே இறுதியுடன் நிறைவடைந்துள்ளது.
இக்கணக்கெடுப்பின்படி, நடப்பு கல்வியாண்டில் (2013-14) தமிழ்வழிக் கல்வியில் சேர வேண்டிய 1லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள், ஆங்கில வழிக் கல்விக்கு விரும்பி சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கில கல்வி மோகமானது, நடப்பு கல்வியாண்டில் மட்டும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகவல் கல்வித்துறையில் "அதிர்வலைகளை' ஏற்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment