Posts

Image
 9 லட்சம் பேர் எழுதினர்.. யுஜிசி-நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு! தேசிய தேர்வு முகமையினால் (NTA) யுஜிசி-நெட் (UGC NET) தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான இறுதி விடைக்குறிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், முடிவுகள் நாளை வெளியாகும் என காலை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் இன்று (அக்.17) வெளியிடப்பட்டன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பி.எச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை சார்பில் இத்தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 19ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் உடனடியாக அந்தத் தேர்வு ரத்த
Image
  TNPSC Group 5A Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; தகுதி, ஊதியம், தேர்வு முறை- முழு விவரம் ! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. இணைய வழி மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஊதியம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி, நிலை 16-ன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். தேர்வு எப்போது? பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவை முறையே தாள் 1 மற்றும் தாள் 2 ஆக நடக்கிறது. எழுத்துத் தே
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; 3.50 லட்சம் காலியிடங்களை காக்காய் தூக்கிச் சென்றதா?- பாமக கேள்வி குரூப் 4 பணியிடங்களில், 15,000 பேரை நிரப்ப இடமில்லை என்றால் 3.50 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக ஸ்டாலின் கூறியது வடிகட்டிய பொய்யா என்று பா.ம.க.செய்தித் தொடர்பாளர் கே.பாலு கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப் 4 பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக்கும் நிலையில், அப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி நடத்திய போட்டித்தேர்வுகளின் மூலம் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கையை 8,932-ல் இருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். சமூக நீதியைக் கருத்தில் கொண்டு அவர் விடுத்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இருக்கும் இடங்களைத்தானே நிரப்ப முடியும்? ஆளுநரை எதிர்த்து அன்புமணி இராமதாஸ் கேள்வி கேட்டாரா? என வினா எழுப்பியுள்ளார். மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பேற்று, இப்படி அறிக்கை வெளியிடும் நிலைக்கு உயர்ந்துள்ள கயல்விழ
Image
விழுப்புரம் ரேஷன் கடைகளில் வேலைக்கு சேரலாம் ! எப்படி விண்ணப்பிப்பது ? விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. பணிவிபரங்கள் : நியாய விலைக்கடை விற்பனையாளர் (Salesman) விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் -45 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் - 4 என மொத்தம் 49 விற்பனையாளர் காலியிடங்கள் உள்ளன. ஊதியம் : 1. நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பு ஊதியம் ரூ.6250/- 2. ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.8600-29000 தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியிைர்,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத
Image
  மந்தகதியில் இயங்கும் டிஆர்பி: ‘டெட்' உட்பட 3 தேர்வுகளை நடத்துவது எப்போது? இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய டெட் உள்ளிட்ட 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடாமல் காலதாமதம் செய்வது தேர்வர்களைகடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி வாயிலாக போட்டித் தேர்வுநடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், வட்டாரக்  கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக (டிஆர்பி) தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) டிஆர்பி-யால் நடத்தப்படுகிறது. தேர்வுக்கு தயாராக முடியும்: ஓராண்டில் காலியாகவுள்ள அரசு பணியிடங்களுக்காக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் விவரம், அதற்கான அறிவிப்பு, தேர்வு தேதி மற்றும் முடிவுகள் வெளியாகும் விவரம் உள்ளிட்டவை அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிடுகிறது.  இதனால் தேர்வர்கள் முன்கூட்டியே
Image
  ஆசிரியா் பணி நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் ஆசிரியா் நியமனத் தோ்வு கட்டாயம் என்ற நடைமுறைக்கு முன்பு சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்த ஆசிரியா்களுக்குப் பணி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனா்.  இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் மீண்டும் அரசு சாா்பில் நடத்தப்படும் நியமனத் தோ்வில் பங்கேற்க வேண்டும் என்றும் அதில் சிறப்புத் தகுதியின் (மெரிட்) அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படுவா் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனம
Image
  10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு