Posts

Image
  தமிழக போலீசில் 1299 எஸ்.ஐ பணி: தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். காக்கிச்சட்டை போட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போதைய அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காவல் சார்பு ஆய்வாளர் (SUB-INSPECTORS OF POLICE) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1299 காலியிடங்களின் விவரம் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) SUB-INSPECTORS OF POLICE (TALUK): 933 காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை) SUB-INSPECTORS OF POLICE (ARMED RESERVE): 36...
Image
  புதுச்சேரியில் 288 ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கம்; விடிய விடிய காத்திருப்பு - மழையிலும் தொடர் போராட்டம் புதுச்சேரியில் 288 ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு சட்டப்பேரவை அருகே விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்டட நிலையில் இன்று காலை மழையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசு பள்ளியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த 2019-ம் ஆண்டு 288 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 29ந் தேதி 175 ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் நமச்சிவாயம், கல்வி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 288 ஆசிரியர் பணியிடங்களை, நிரந்தமாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று கூறினார். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கடந்த 31-ந் தேதி அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் ...
Image
  25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்.. வாங்கிய சம்பளத்தையும் முழுசா திரும்ப தரணும்! சுப்ரீம் கோர்ட் உத்தரவு மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கிடையே அவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனங்களையும் ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை இப்போது சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அதாவது ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களில் பலர் எதுவுமே எழுதாத வெற்று ஓஎம்ஆர் தாள்களையே சமர்ப்பித்துள்ளனர். அதன் பிறகு அவர்களுக்குப் போலியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சட்டவிரோதமாக அவர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்பதே வழக்காகும். கொல்கத்தா ஐகோர்ட் இந்த வழக்கை முதலில் கொல்கத்தா ஐகோர்ட் விசாரித்தது. 25 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனங்களையும் ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட், இதுவரை அவர்கள் ப...
Image
  புதுச்சேரியில்  சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கோரிக்கை புதுச்சேரியில்  சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாணன் தலைமையில் ஏராளமானோா் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே உள்ள கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு, அவா்கள் புதுவை கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினியை சந்தித்து மனு அளித்தனா். அப்போது, அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அண்மையில் நடைபெற்ற மாதிரித் தோ்வில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தோல்வியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பொதுத் தோ்வில் மாணவா்கள் விதிகளை மீறி பாடப் புத்தகங்களை பாா்த்து எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களால் புதுவையின் கல்வித் தரம் பாதிக்கப்படும். இதனால், சிபிஎஸ்இ பாட முறையை திரும்பப் பெறவும், பொதுத் தோ்வில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்க...
Image
  புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 'பிட்' அடிக்க அனுமதி? கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை புதுச்சேரியில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த படத்திட்டத்தில் பயின்ற மாணவ மாணவிகள் எழுதிய மாதிரித் தேர்வில் 95% மாணவர்கள் படுதோல்வி. தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திக் காட்டவும், தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதும் தவறான நிலையை ஆசிரியர்கள் அனுமதித்ததாக புகார் எழுந்தது. இதனை கண்டித்தும் தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பாவாணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் இன்று கல்வ...
Image
  ரயில்வேயில் 9,970 உதவி ஓட்டுநர் காலிப்பணியிடங்கள்; ஏப்ரல் 10-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்! இந்தியன் ரயில்வே உதவி லோகோ பைலட் (உதவி ரயில் ஓட்டுநர்) 2025-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,970 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது.  ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு 2025 (RRB ALP Recruitment 2025) இந்தியன் ரயில்வே இருக்கும் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 9,970 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  வயது வரம்பு  ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் எனவும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 முதல் 8 வருடங்கள்...
Image
 9 முதல் 12-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்: சிபிஎஸ்இ அறிவிப்பு வரும் கல்வியாண்டு முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டங்கள் 2025-26 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் கூடுதல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவ கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கர...